இன்று முதல் அமலுக்கு வரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராய விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள்:
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவும் மாநிலமாக கேரளா உள்ளது. இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் இன்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பினராய விஜயன் கூறுகையில்,
TN Job “FB Group” Join Now
- கேரளா முழுவதும் அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்திற்கும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
- மாநில, மத்திய அரசு துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைப்பிரிவுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ள அதிகாரிகளின் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் போன்ற அவசர ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- அத்தியாவசிய பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் செயல்படலாம்.
- ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலை வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருபவர்கள் அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம்.
நாடு தழுவிய முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு – ராகுல் காந்தி பேச்சு!!
- மேலும் தொலைத்தொடர்பு சேவை, உள்கட்டமைப்பு சேவை, இணைய சேவை வழங்குபவர்கள் பெட்ரோல், எல்.பி.ஜி வழங்குவோர் அத்தியாவசிய சேவை பிரிவில் சேர்த்துள்ளனர்.
- கட்டுப்பாடுகள் நேரத்தில் நோயாளிகள், மற்றும் அவர்களது தொழிலாளர்கள் பயணம் செய்யலாம்.
- அவசர தேவை பணியாளர்கள், முதலாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
- மளிகை கடைகள், உணவகங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
- அனைத்து வகையான திரைப்படம், சீரியல் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.