தமிழகத்தில் மீன்வள உதவியாளர் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 2 வரை விண்ணப்பம்!
தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் பணியிடத்துக்கு, தகுதியின் அடிப்படையில் புதிய ஊழியரை பணியமர்த்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உதவியாளர் பணி:
தமிழக மீன்வளத் துறையில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் அந்த பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கபட்டுள்ளன. அந்த வகையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை செலுத்தலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 35,342 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதாரத்துறை!
அதாவது சென்னை மண்டலம் இணை இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில் ஒரு மீன்வள உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இந்த பணியிடத்தை பொதுப்போட்டி பிரிவின் கீழ் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வரை வரவேற்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
அதன் அடிப்படையில் 30 வயதுக்குட்பட்ட பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் (மண்டலம்), சென்னை அலுவலகம், DMS வளாகம் மூன்றாம் தளம், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்ற முகவரியில் அனுப்பலாம். இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 044 2432 8596 என்ற எண்ணை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.