இந்தியாவில் ஒரே நாளில் 35,342 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதாரத்துறை!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேர நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 35,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் மெல்ல ஆரம்பித்து பின்னர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். அனைத்து மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுகள் – இன்று முதல் விண்ணப்ப பதிவு!
இதன் விளைவால் தற்போது சில வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் நாட்டின் கொரோனா பாதிப்புக்கான 24 மணி நேர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 35,342 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை 3,12,93,062 பேர் தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் 483 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,19,470 பேர் ஆக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் 38,740 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 4,05,513 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 54,76,423 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.