தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்? – சுற்றறிக்கை வெளியீடு!

0
தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்? - சுற்றறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்? - சுற்றறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்? – சுற்றறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் யார் யாரெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரி அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் என்கிற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை பட்டதாரி:

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசு பணியிடங்களுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கபடுகிறது. அதில், சில வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

அதாவது, ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டாவது பிள்ளை முதலாவதாக பட்டப்படிப்பை முடித்தால் அந்த நபருக்கே முதல் தலைமுறை பட்டதாரி சான்று வழங்கி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இருவரும் ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தால் பட்டப்படிப்பு முடித்த மாதத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து – அரசுக்கு வலுயுறுத்தல்!

அடுத்ததாக, முதலாவது நபர் முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்று வேலைவாய்ப்பினை பெறுவதற்கு முன்பாகவே இறந்துவிட்டால் இரண்டாவது நபருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!