முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் – சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறிவிப்பு!

0
முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் - சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறிவிப்பு!
முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் - சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறிவிப்பு!
முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் – சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறிவிப்பு!

மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

100 யூனிட் மின்சாரம்:

200 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

இதனால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரசின் வெற்றிக்கு கைகொடுத்த பல்வேறு திட்டங்களை ராஜஸ்தான் மாநிலத்திலும் அமல்படுத்த இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருக்கிறார். இதில், முதல் கட்டமாக கர்நாடக மாநிலத்தைப் போலவே ராஜஸ்தான் மாநிலத்திலும் 100 யூனிட் மின்சாரம் வரைக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான குட் நியூஸ் – முதல்வர் போட்ட உத்தரவு.. பண மழை கொட்ட போகுது!

மேலும், பொதுமக்கள் 200 யூனிட் வரையும் மின்சாரம் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை எனவும், மீதமுள்ள யூனிட் மின்சார கட்டணத்திற்கான தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாகவும் அசோக் கெலாட் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!