தமிழக அரசு ஊழியர்களுக்கான குட் நியூஸ் – முதல்வர் போட்ட உத்தரவு.. பண மழை கொட்ட போகுது!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய பண பலன்களை வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் கே. என். நேரு பண பலன்களை வழங்கினார்.
பண பலன்கள்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு ஊழியர்களை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 42% அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சேலம் மண்டலத்திற்குட்பட்ட ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு அமைச்சர் கே. என். நேரு பண பலன்களை வழங்கினார்.
UIDAI ஆதார் ஆணையத்தில் Deputy Director காலிப்பணியிடங்கள் – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பியுங்கள்!
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், கடந்த 2020 ம் ஆண்டு மே மாதம் முதல் 2022 நவம்பர் வரையிலான ஆண்டுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தானாக விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் உட்பட 8,361 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.