பிப்.,20 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரும் பிப்ரவரி 20ம் தேதி தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு அரசு மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கிறது. மேலும், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என அனைவருக்கும் வேலை வாய்ப்பு முகாமினை அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தி அதன் மூலம் அவர்களுக்கான வேலையினை பெற்றுத் தருகிறது.
டெட் தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
கிருஷ்ணகிரி மாவட்டம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் ஊத்தங்கரை அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பிப்ரவரி 20ம் தேதி நடத்துகிறது. காலை 9 மணிக்கு முகாம் தொடங்கப்படும். முகாமில் கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை, சேலம் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்க்ள கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி:
முகாமில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு தோலிவியடைந்தவர்கள் மற்றும் தேர்ச்சியடைந்தவர்கள், 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, பி.இ., ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுடையவர்கள் தங்கள் சுயவிவரம் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் வி. ஜெயச்சந்திரபானு அவர்கள் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்