பிப்.19ம் தேதி விழுப்புரத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்!!
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மறுநாளான பிப்ரவரி 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு வெள்ளி:
தமிழகத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வாரம்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இது “வேலைவாய்ப்பு வெள்ளி” என்று அழைக்கப்படுகிறது.
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!!
விழுப்புரம் மாவட்டம்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 19ம் தேதி அன்று மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். அதில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்யவுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கல் கல்வித்தகுதியினை பதிவு செய்ய வேண்டும். முகாமிற்கு வரும்பொழுது தங்களது புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுயவிவரம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்டவேலை வாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04146 – 226417 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்