குணசேகரனுக்கு பேரதிர்ச்சியை அளிக்கும் ஆதிரையின் திருமணம் – எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த கட்டம்!
எப்போது தான் ஆதிரையின் திருமணம் முடியும் என்று காத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் அளிக்கும் வகையில் ஆதிரையின் திருமணம் நடக்க உள்ளது.
எதிர்நீச்சல்:
குணசேகரன் இரண்டு பக்கமும் நாடகம் நடத்தி ஆதிரையின் திருமணத்தை சாக்காக வைத்து சொத்தை கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் போட்டது அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும், எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் குணசேகரன் குடும்பத்தினரிடம், ஆதிரைக்கு நல்லது தான் செய்வேன் என்று பொய் சொல்லி சமாளித்து வருகிறார்.
விசாலாட்சிக்கும், ஆதிரைக்கும் யாரை நம்பவேண்டும் என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். ஆனால் ஜனனி, குணசேகரன் எப்படியும் அருணுடன் ஆதிரைக்கு திருமணத்தை நடத்தி வைக்க மாட்டார் என்று புரிந்து கொண்டார். அருணிடம் பேசி, நிலைமையை புரியவைத்து, ஆதிரையுடன் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதனால் குணசேகரன் தன்னை மீறி ஆதிரையின் திருமணம் முடிந்து விட்டதா என்று கோபத்தில் புதிய சதி வேலைகளை தொடங்க உள்ளார்.
Exams Daily Mobile App Download