EPFO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதம் அறிவிப்பு!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான இந்த காலாண்டுக்குரிய வட்டி விகிதமான 7.1 சதவீத வட்டியையே அடுத்த காலாண்டுக்கும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வட்டி வீதம்:
அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் PF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் பணம் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். இந்த வைப்பு நிதியின் கீழ் அனைத்து தொழிலாளர்களும் தங்களது வருங்காலத்துக்கான பணத்தை சேர்த்து வைக்க முடியும். இந்த நிதியின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு கடன் தொகையும் குறைந்த அளவு வட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஒவ்வொரு காலாண்டுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்படும். GPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி PF போன்ற பல வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவீதம், இந்த ஆண்டின் முதல் காலண்டான ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 7.1% வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மே 3 வரை முழு ஊரடங்கு? இன்று முக்கிய முடிவு!!
இந்நிலையில் இந்த ஆண்டில் வரப்போகும் இரண்டாம் காலாண்டான ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள GPF – PF உட்பட பல வருங்கால வைப்பு நிதிக்கு அதே 7.1% வட்டி வீதத்தை தொடர்வதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார பிரிவு முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.