தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் – ஆசிரியர்களுக்கு பயிற்சி.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் – ஆசிரியர்களுக்கு பயிற்சி.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் 2023- 2024 ஆம் கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு இன்னும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழிகாட்டு செயல் முறைகளை வெளியிட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு:

தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த வருடம் துவங்கி வைத்தார். தற்போது அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெறும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விரைவில் விமான சேவை – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அனைவரும் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை பெற வேண்டும் என்பதை திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 1 – 3 வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் 2023- 2024 ஆம் கல்வியாண்டின் முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 5ம் தேதி துவங்க உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 10 முதல் 12ம் தேதி வரை மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஏப்ரல் 24, 25, 26ம் தேதிகளில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!