பிப்ரவரி 18 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு இல்லை – அண்ணா பல்கலை விளக்கம்!!
தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 18ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அண்ணா பல்கலை சார்பில் புதிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
கல்லூரிகள் திறப்பு??
தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுப்பது குறித்து உயர்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.
ரூ.21000 ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் – எல்ஐசி முகவர்கள் மாநாட்டில் தீர்மானம்!!
தற்போது அண்ணா பல்கலை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18ம் தேதி முதல் 2 மற்றும் 3ம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு பொறியியல் வகுப்புகள் தொடங்கப்படும். மே 24 இல் செய்முறை தேர்வுகள், ஜூன் 2 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 26 இல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இறுதியாண்டு தவிர பிற மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு இதுவரை முடிவெடுக்காத நிலையில், இந்த தகவல் மாணவர்களை குழப்பம் அடைய செய்தது.
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!!
இதற்கு விளக்கம் அளித்த பல்கலைக்கழக அதிகாரிகள், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பிப்ரவரி 18 முதல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படாது எனவும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் வாரத்தில் 6 நாட்கள் (சனிக்கிழமை உட்பட) ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்