“முதல்வரின் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்…!!” நடந்தது என்ன…?? முழு விவரம் உள்ளே…
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டின் (முடா) கீழ் உள்ள வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இதனால், அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சித்தராமையாவின் மனைவி பார்வதியும் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பார்வதியின் பெயரில் சுமார் 300 கோடி மதிப்பிலான முடா வீட்டு மனைகளை சித்தராமையா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கையகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இயற்கையாக உருவானது அல்ல.. அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிவித்த திடீர் தகவல்..
இதனை தொடர்ந்து, கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த முடா வழக்கில் தொடர்புடைய கர்நாடக அமைச்சர் பைரதி சுரேஷுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முடா வழக்கிற்கு எதிராக இருவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

























