தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் ஏற்கனவே காலஅவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அது முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 மாதம் நீட்டிப்பு:
தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பு முதல் தங்களது கல்வித்தகுதியினை பதிவு செய்து வர வேண்டும். அவ்வாறு பதிவு செய்வதன் மூலம் முன்னர் சீனியரிட்டி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு வந்தது. மேலும் அதனை ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – உத்தரவு பிறப்பிப்பு!
அவ்வாறு புதுப்பித்தலை பெரும்பாலானோர் மேற்கொள்ளாமல் இதுவரை இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. அந்த வகையில் 2017 முதல் 2019 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது 2014 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் மாற்றம் – அரசு உத்தரவு!
அதாவது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக 3 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பெற நினைக்கும் நபர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் புதுப்பித்து கொள்ளலாம். மேலும் 2014க்கு முன் புதுப்பிக்காதவர்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் தகவல் பலகையில் காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.