தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் மாற்றம் – அரசு உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததை போல டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்:
தமிழகத்தில் கடந்த கடந்த மே மாதம் தொடங்கிய கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மற்ற கடைகள், அலுவலகங்களை தொடர்ந்து மதுக்கடைகளும் மூடப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த நேரத்தில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடுவர். இதனால் வைரஸ் தொற்று மேன்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் அரசு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கவில்லை. டாஸ்மாக் கடைகள் அடைப்பால் அரசு வருவாய் இழப்பை சந்தித்தது.
தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் ‘தமிழ்’ பாடத்தாள் கட்டாயம், 100% வேலைவாய்ப்பு – அரசாணை வெளியீடு!
அதன் பிறகு தடுப்பூசிகள் பயன்பாட்டால் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததும் பகுதி நேரமாக மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் அரசின் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மது விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் கூட்டத்தை குறைப்பதற்காக டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்றுக்கு முன் இருந்தது போல டாஸ்மாக் கடைகள் இனி பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும் என்றும் அரசுக்கு வருவாய் கிட்டும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா முழுமையாக குறையாத சூழலில் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.