தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – உத்தரவு பிறப்பிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள்

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது கர்நாடகா மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் மாற்றம் – அரசு உத்தரவு!

இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பாக பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இதன் விளைவாக கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு பள்ளிகளுக்கு அறிவித்துள்ளது. அதில் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வகுப்புகள் நடத்தப்பட எனவும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் ‘தமிழ்’ பாடத்தாள் கட்டாயம், 100% வேலைவாய்ப்பு – அரசாணை வெளியீடு!

மேலும் பள்ளிகளில் நுழையும் அனைவரும் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். அதிக வெப்பநிலை உள்ளவரை அனுமதிக்க கூடாது. அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயமான முறையில் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வகுப்பறைகளிலும், பள்ளி வளாகங்களிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் உள்ள நீச்சல் குளங்களை மூட வேண்டும். மேலும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதே போல் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளையும் அனுமதிக்கக் கூடாது போன்ற விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!