நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!
நாடு முழுவதும் தற்போது ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலமாக 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் ரோஸ்கர் மேளா என்கிற திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 6 ஆவது கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தியா முழுவதும் உள்ள 43 இடங்களில் ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பு பெற்றுள்ள ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக மருத்துவ துறையில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமே 884 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், சென்னையில் மட்டுமே 646 மத்திய அரசு அதிகாரிகளுக்கு புதிய பணி நியமன ஆணையும், திருச்சியில் 78 மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுத்துறை வங்கிகள், வருவாய்த்துறை, பாதுகாப்பு அமைச்சகம், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், ரெயில்வே, தபால்துறை, சுங்கம் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம் ஆகிய துறைகளில் புதிய பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டிருக்கிறது.