தமிழகத்தில் முட்டையின் விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் முட்டையின் விலை தற்போது உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முட்டையின் விலை:
தமிழகத்தை பொறுத்தவரை நாமக்கலில் தான் முட்டை பண்ணை விற்பனையாளர்கள் உள்ளனர், நாமக்கல் முட்டை விலை நிர்ணயம் மையத்தில் நிர்ணயிக்கப்படும் விலையின் படி தான் முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திடீரென்று இன்று முட்டையின் விலை பத்து காசுகள் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000த்துடன் கூடுதலாக ரூ.1000 வழங்க திட்டம் – பொதுமக்கள் ஹாப்பி!!
நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு முட்டையின் விற்பனை விலையானது ரூபாய் 5.80 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ விலை எந்தவித மாற்றமும் இன்றி ரூபாய் 76 என்று விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். முட்டை விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.