TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.. முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!
தமிழக அளவில் அரசுப் பணிக்குத் தேவையான காலியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4, குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகளை TNPSC தேர்வு முகமை நடத்தி வருவதை நாம் அறிவோம். இந்த நிலையில் போட்டித் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதில், ‘போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்’. ‘தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6,244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இந்த தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் செயல் என்று கூறி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.



























