சிலிண்டர் வைத்திருப்பவர்கள் உடனடியாக e-KYC சரிபார்ப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் கார்டுக்கு சிலிண்டருக்கு இலவசம் மானியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சிலிண்டர் திட்டம்:
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் ஆண்டுக்கு நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேராதவர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதிபெற முடியாது. இந்த திட்டம் மூலம் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1,600 வட்டியில்லா கடன், கேஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்கப்படுகிறது.
TNPSC BOOK Materials – எங்கும் அலைய வேண்டாம்.. எல்லாம் ஓரிடத்தில்!!
இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்தால் மட்டுமே, சமையல் சிலிண்டர் தடையின்றி கிடைக்கும் என பெட்ரோலிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் உடனே இந்த e-KYC சரிபார்ப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.