
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
பொதுவாக மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருமவழை நடப்பாண்டு முன்கூட்டியே நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (13-05-2025) தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், கேரளாவில் வரும் 27 ஆம் தேதி பருவமழை தொடங்கி படிப்படியாக குமரிமுனை வரை பரவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பிரபல வங்கி.. எவ்வளவு சதவீதம் தெரியுமா..??
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி “நாளை (14-05-2025) கோவை மற்றும் நீலகிரில், மே 15 ஆம் தேதி வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர, திருச்சி, நீலகிரி மற்றும் கோவையிலும், மே 16 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

























