இந்தியாவில் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு.. FADA வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
மக்கள் பயணிக்கும் பைக், கார் மற்றும் வேன் போன்ற மோட்டார் வாகனங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, சந்தைப்படுத்தல், விற்பனை, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கியதே மோட்டார் வாகனத் துறையாகும். மேலும், வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தொழில்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், மோட்டார் வாகனங்களின் பயன்பாடு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Part C – PDF Download…!!
அதாவது, 2024 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாகனங்கள் விற்பனை விகிதம் 7% வரை சரிவை கண்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்களின் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது. மேலும், கடந்தாண்டு பிப்ரவரியில் 20.46 லட்ச வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு 18.99 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து, சமீபத்திய ஆண்டுகளில் அரசு விதிக்கும் கடுமையான பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக அதிகரித்து வரும் வாகனங்களின் விலையால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


























