மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..அடுத்த ஒரு வாரத்தில் அகவிலைப்படி 2% உயரும் என தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழுவின் அடிப்படையில் ஆண்டிற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான அரை ஆண்டிற்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு, தற்போது 53% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அரை ஆண்டிற்கு 2% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 55%மாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு.. FADA வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
இதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்து, வருகின்ற மார்ச் 14 ஆம் தேதி, அதாவது ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாதம் 18,000 ரூபாய் அடிப்படை சம்பளமாக பெறுபவர்களுக்கு, 2% அகவிலைப்படி உயர்ந்தால் ரூ. 9,540 லிருந்து ரூ. 9,900 ஆக கிடைக்கும் . இதுவே, 3% ஆக அகவிலைப்படி உயர்ந்தால் ரூ. 540 உயர்ந்து 10,080 ஆககிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.























