மாதம் பிறந்தால் ரூ.30,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!!
காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கி வரும் பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பாதுகாப்பு அலுவலகர் பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 07.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DSWO வேலைவாய்ப்பு விவரங்கள்:
காஞ்சிபுர மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் (Protection Officer) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் பெண்களுக்கு என மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் மாவட்ட சமூகநல அலுவலகர் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Sociology, Social Work, Psychology பாடப்பிரிவில் MA பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் விண்ணப்பதாரர்கள் கணினி பயன்பாடு பற்றி தெரிந்தவராகவும், தட்டச்சு செய்ய தெரிந்தவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Follow our Instagram for more Latest Updates
பாதுகாப்பு அலுவலர் (Protection Officer) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் BC / MBC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் என்றும், SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் என்றும் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்காலம் முழுவதும் ரூ.30,000/- மாத ஊதியமாக தரப்படும்.
SSC CHSL 4500 பணியிடங்களுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் – Previous Year Question Paper Download!
Exams Daily Mobile App Download
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு 07.01.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
Hi
Good job