உலக சுகாதார மையத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா.. டொனால்டு டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை..
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் குடியேற்றம் முதல் காலநிலை மாற்றம் வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்த டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார். இந்நிலையில் இந்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்காவை விலக்கிக் கொள்ளும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தனது முதல் பதவி காலத்தின் முடிவில், கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வந்த ஆரம்ப நாட்களில் WHO அமைப்பு நோயைக் கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று டிரம்ப் விமர்சித்தார். இதை தொடர்ந்து, முன்னாள் அமெரிக்க அதிபர் “ஜோ பைடன்” பதவிக்காலத்தில், அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை WHO பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாளவில்லை. அதனால், தற்போது உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
























