தொலைதூர கல்வி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்தாகுமா ???
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மாற்று வழியில் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் அடுத்த கல்வியாண்டுகளும் தொடங்கி ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. .
கல்லூரியினை பொறுத்தவரை அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் இறுதி பருவ தேர்வுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் இறுதி பருவ தேர்வுகள் தவிர கட்டணம் செலுத்தி இருந்தாலும் அறியர் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வு கட்டணம் மட்டும் சரியாக செலுத்தினால் தேர்ச்சி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. தற்போது அனைத்து தரப்பு அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் தொலைதூர கல்வி இயக்கத்தின் மூலம் பயில்வோருக்கும் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அது குறித்த தெளிவான தகவல்களை விரைவில் வெளியிடுமாறு மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்