தமிழக அரசு பள்ளிகள் தரம் உயர்த்துதல் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிக்கை!!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் உயர்துவது குறித்து பள்ளிகளின் பட்டியலை தயாரித்து அனுப்ப தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அரசு பள்ளிகளின் தரம்:
தமிழக அரசு வருடம் தோறும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். இதன் மூலம் தமிழக அரசின் பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கும் அனைத்து கல்வி வசதிகளும் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காவே தமிழக அரசு வருடம் தோறும் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கீடு செய்கிறது.
சென்னை மேம்பாட்டு ஆணையத்தில் 131 பணியிட நியமன முறையீடு – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
நடப்பு ஆண்டு பணிகள்:
2021-2022 ம் ஆண்டில் அரசு தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “தமிழக அரசின் சார்பில் நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக 2021-2022 ன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவு திட்டத்தின் படி தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பள்ளிகளில் பட்டியலை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் தரம் உயர்வுக்கு தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் பட்டியலை தயாரித்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். தரம் உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு போன்ற தகுதிகளின் அறிக்கையையும் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில், எவ்வித புகார்களுக்கு இடம் அளிக்காத வைகையில் இருக்க வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்