சென்னை மேம்பாட்டு ஆணையத்தில் 131 பணியிட நியமன முறையீடு – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள பணி இடங்களுக்கான பணியாளர்களை அதிகாரிகள் முறைகேடான முறையில் தேர்ந்தெடுத்ததாக பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பெருநகர மேம்பாட்டு ஆணையம்:
சி.எம்.டி.ஏ நகரத்தில் உள்ள பொதுவான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் அரசின் துறையாகும். நகரங்களின் பள்ளிகள், சாலைகள், பாலங்கள் போன்ற பொதுமக்களுக்கு தேவையான மற்றும் நகரத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படும் பணிகளையும் மேற்கொள்ளும். சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் 131 பணி இடங்களுக்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக இலவச கட்டாயக்கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை – பெற்றோர்கள் கோரிக்கை!!
பணியாளர் தேர்வு:
சி.எம்.டி.ஏ., உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பணியாளர்கள் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களை பற்றிய விவரங்கள் ஏதும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
முறைகேடு வழக்கு:
தேர்வான நபர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து பணி ஆணைகளை வழங்கியுள்ளதாக மற்ற விண்ணப்பதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். இதனால் சிஎம்டிஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. பணியாளர்களை தேர்வு செய்த அதிகாரிகள் மீதும், துறை ரீதியான ஆய்வுகள் நடக்க உள்ளது. பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், “தேர்வு முறையை வழி நடத்தியவர்கள், முடிவுகள் எடுக்கும் நிலையில் இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்