நேரடியாக வந்து வரி வசூல் செய்யப்படும் – திருப்பூர் மாநகராட்சி!!
தமிழகத்தில் திருப்பூர் மாநகராட்சியில் வரி செலுத்துவோர் தகவல் அளித்தால் நேரடியாக வந்து அதிகாரிகள் வரியை வசூலித்து கொள்ளும் புதிய வசதியை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
வரி வசூல் முறை :
தமிழகத்தில் மக்களிடம் இருந்து அரசு பல்வேறு வரிகளை வசூலித்து வருகிறது. இந்த வரி வசூல் தொகை அரசின் முக்கிய வருவாயாக உள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசு தனிநபர் வருமானம், நிறுவனங்களின் லாபம், பொருட்கள், சேவைகள் மற்றும் பரிவர்த்தனை போன்றவைகளுக்கு வரி விதிக்கின்றது. இந்த வரிகள் நேரடி வரிகள், மறைமுக வரிகள் என்று 2 வகையாக உள்ளது. நேரடி வரி என்பது தனி நபர்கள் செலுத்த கூடியது வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி, போன்றவை மறைமுக வரி என்பது வணிக நிறுவனங்கள் பொருட்களுக்கு செலுத்தும் வாரியாகும்.
தமிழக அரசு அதிரடி – சிறிய கோயில்களை இணைக்க முடிவு!
இந்த கொரோனா பரவல் காரணமாக மக்கள் வரிகளை செலுத்தாமல் உள்ளனர். அரசும் மக்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் அரசு பெரும் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. அதனால் திருப்பூர் மாவட்ட மாநகராட்சி வரியை வசூலிக்கும் முயற்சியாக நேரடியாக வந்து அதிகாரிகள் வரியை வசூலித்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. ஏறத்தாழ 2 லட்சம் வரி விதிப்புகள் உள்ளன.
TN Job “FB Group” Join Now
இங்கு ‘ஆன்லைன்’ மூலம் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அது தவிர வரி செலுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ளும் வகையில் வருவாய் ஊழியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் செல்போன் எண் வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தெரிவித்தால் அத்திபாரிகளை வீட்டிற்கே வந்து வரியை வசூலித்து கொள்வார்கள் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை பயன்படுத்தி மக்கள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தி அரசுக்கு உதவ வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும் வரி செலுத்துவோர் உரிய ரசீதுகளை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.