கனமழை முன்னெச்சரிக்கை.. தயார் நிலையில் 329 நிவாரண முகாம்கள்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் கனமழை.. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. முடிவை அறிவிப்பதில் ஆட்சியர் குழப்பம்!!
இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை கொடுக்கப்பட்டு உள்ளது’. ‘சாராசரியாக சென்னையில் 3.60 செ.மீ மழை பதிவாகியுள்ளது’. ‘தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’. ‘மக்கள் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’. ‘சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன’. ‘சென்னையில் 329 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
























