தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘இ – மெயில்’.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் கொண்டு வர வேண்டும் என்று மாணவர்களுக்கு டிஜிட்டல் வழியில் பாடங்களை கற்பிக்க அரசு அறிவுறுத்தியிருந்தது.
விஜய்யின் அடுத்த அதிரடி.. தயாராகும் ஊழல் பட்டியல்.. விவரம் உள்ளே!!
அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ‘இ – மெயில்’ ஐடி கிரியேட் செய்துதர, அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், வகுப்பாசிரியர் உதவியுடன் மெயில் ஐடி கிரியேட் பண்ணவும், அந்த மெயில் ஐடிக்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்பான தகவல்களை பெற ஏதுவாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



























