நாடு முழுவதும் 55 புதிய லட்சம் வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் தகவல்!!
சுரங்கம் மற்றும் கனிமவள துறை தொடர்பான சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் மூலமாக 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் பிரஹலாத் தெரிவித்துள்ளார்.
சுரங்கம் மற்றும் கனிமவள துறை:
சுரங்கம் மற்றும் கனிம (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957ல் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சுரங்கத் தொழிலை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும், கனிமங்களுக்காக இன்னொரு நிறுவனத்தை சார்ந்திருப்பதை இந்த திருத்தும் மூலமாக தவிர்க்க முடியும். இந்நிலையில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை தொடர்பான சட்ட மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மத்திய அமைச்சர் பிரஹலாத் கூறுகையில், “நமது நாட்டில் 95 கனிமங்கள் கிடைக்கின்றன. இவை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு நிகராக தமிழகத்தில் கனிமங்கள் கிடைக்கின்றனர். அதில் தங்கம் மற்றும் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களில் தனியார் நிறுவனங்கள் பங்குபெற உள்ளனர். நாட்டில் உள்ள உள்நாட்டு உற்பத்தியில் 1.75 சதவிகிதமாக உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் விடுமுறை – அரசு அறிவிப்பு!!
தற்போது இந்த சட்டத்திருத்த மசோதா காரணமாக பங்களிப்பு விகிதம் 2.5 சதவிகிதமாக உயர்ந்து பொருளாதாரம் வலுப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக வெளிப்படை தன்மை ஏற்பாடும் வாய்ப்புகள் உள்ளது. அத்துடன் ஏலம் விடப்படும் சுரங்கங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.