மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு உத்தரவு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.17 லட்சம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் டெல்லியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க டெல்லியில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லி முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு அங்கு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணவீக்க மதிப்பு – 8 ஆண்டுகள் இல்லாத அளவு உயர்வு!!
டெல்லியில் உள்ள அரசு அலுவலங்களில் 50 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்புள்ளவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும அரசு அலுவலகங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள தேதி மாற்றம் – அதிருப்தியில் பணியாளர்கள்!!
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து வருபர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும், அனைவரும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களில் ஆலோசனை கூட்டங்களை காணொளி மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.