இந்தியாவின் பணவீக்க மதிப்பு – 8 ஆண்டுகள் இல்லாத அளவு உயர்வு!!
இந்தியாவின் பணவீக்கம் மதிப்பு கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருவதன் அறிகுறியாக இது கருதப்படுகிறது.
பணவீக்கம் உயர்வு:
பொருளாதாரத்தின் செயல்பாட்டை நிர்ணயிப்பதில் பணவீக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியாவில் பணவீக்கத்தை கண்டுபிடிப்பதற்கு மொத்த விலை குறியீட்டு எண் என்ற முறையை பயன்படுத்துகிறார்கள். கடந்த மார்ச் மாதம் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களின் விலை ஏற்றமே இந்த உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 மார்ச் மாதம், 2021 மார்ச் மாதம் போன்ற ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் பணவீக்க அளவீடு 0.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பிப்ரவரி மாதம் மொத்தவிலை பணவீக்கம் 4.2 சதவிகிதமாக இருந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள தேதி மாற்றம் – அதிருப்தியில் பணியாளர்கள்!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வே போக்குவரத்தை நம்பி இருக்கும் அனைத்து பொருள்களையும் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இதன் காரணமாக உணவு பொருள்கள் மீதான பணவீக்கம் 3.24 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு வகைகள் மீதான பணவீக்கம் 13.14 சதவிகிதமாக, பழங்கள் மீதான பணவீக்கம் 16.33 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கமும் 10.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு – தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம், 5.55 சதவிகிதமாக 4 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இந்த பணவீக்க உயர்வு உற்பத்தியாளர்களின் விலை நிர்ணய சக்தியை உயர்த்துவதாக உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருவதன் அறிகுறியாக கருதப்படுகிறது.