தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதும் – அரசு வேலை ரெடி! உடனே விண்ணப்பியுங்கள்!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Part Time Sweeper எனும் பகுதி நேர தூய்மையாளர் பணிக்கு என்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Backward Classes and Minorities Welfare Office Dharmapuri (DBCWO) |
பணியின் பெயர் | Part Time Sweeper |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.06.2022 & 09.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DBCWO காலிப்பணியிடம்:
தற்போது வெளியான அறிவிப்பில், Part Time Sweeper பணிக்கு என்று மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆண்களுக்கு 03 பணியிடங்கள் மற்றும் பெண்களுக்கு 01 பணியிடமும் நிரப்ப உள்ளது.
TN Job “FB Group” Join Now
DBCWO தகுதி விவரம்:
தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
DBCWO வயது விவரம்:
- 01.07.2022ம் அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
DBCWO ஊதிய தொகை:
இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் ரூ.3,000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
DBCWO தேர்வு முறை:
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
- நேர்காணல் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
DBCWO விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று, அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.05.2022 அன்றுக்குள் வரும்படி அனுப்ப வேண்டும்.