திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்!

0
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி - கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி - கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்!

தமிழகத்தில் திருச்செந்தூர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி திருவிழா:

உலக புகழ் பெற்ற திருக்கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலும் ஒன்று. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நவம்பர் மாதத்தில் கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – முழு விவரம் இதோ!

இவ்வாறாக ‘கந்தனுக்கு அரோகரா’ என்ற முழக்கம் விண்ணை பிளக்க ஆண்டுதோறும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும். அந்த 11 நாள் விழாவில் சூரசம்ஹார நிகழ்வு மற்றும் திருக்கல்யாண நிகழ்வு போன்றவை சிறப்பானவைகள் ஆகும். இந்த சூரசம்ஹார நிகழ்வில் பல கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று காலை கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி வரும் 15 ம் தேதி முடியவுள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இந்த கந்தசஷ்டி திருவிழாவுக்கு இன்று முதல் வருகிற 8 ம் தேதி வரை தினமும் ஆன்லைன் மூலம் 5 ஆயிரம் பேரும், நேரடியாக வருபவர்கள் 5 ஆயிரம் பேரும் என 10 ஆயிரம் பேருக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9 ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் 10 ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவத்துக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!