மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – முழு விவரம் இதோ!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 368 சதவீதம் மற்றும் 196 சதவீதம் என்ற முறையில் அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
DA உயர்வு
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பேரலை தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் சலுகைகளான அகவிலைப்படி தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா 2ம் அலைத்தொற்றும் ஓய்ந்திருக்க கூடிய சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% மாக அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் DA விகிதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்குமான DA தொகை உயர்த்தப்படுவதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படியை (DA) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராஜஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் நவ.6 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை முறையே 368 சதவீதம் மற்றும் 196 சதவீதம் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை பெற இருக்கும் ராஜஸ்தான் மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.