தமிழகத்தில் நவ.6 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகளின் காரணமாக மாவட்ட வாரியாக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்தடையானது முன் அறிவிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட வாரியாக மின்பராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பராமத்து பணியானது எதிர்காலத்தில் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக அனைத்து துணைமின் நிலையங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இவ்வாறு செயல்படுவதால் பழுதான மின்கம்பிகள் அகற்றப்படும். தரமான புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து எதிர்காலத்தில் மின்தடை இல்லாத வாழ்வு மக்களுக்கு அமையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்யபடும் மின்தடையானது மின்வாரியத்தில் பராமத்து பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களின் நலன் கருதி செய்யப்படுகிறது. இவ்வாறாக மின்பராமத்து பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்தடை அறிவிக்கப்படும். அதன்படி வெண்டிபாளையம் துணைமின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை நவ.6 ம் தேதி மின்பராமத்து பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அந்த துணைமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பை மின்வாரியம் அறிவித்துள்ளது.
PG TRB வேலைவாய்ப்பு 2021 – தமிழ் பயின்றவர்களுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!
இவ்வாறாக வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம், நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார் மேடு, 46 புதூர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (நவ.6) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.