தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் இ பாஸ் கட்டாயம் – அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி!!

0
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் இ பாஸ் கட்டாயம் - அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி!!
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் இ பாஸ் கட்டாயம் - அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி!!
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் இ பாஸ் கட்டாயம் – அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை கோயிலில் வரும் 7 ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கோயில்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். தற்போது அந்த கார்த்திகை திருநாள் வருவதை முன்னிட்டு திருவண்ணாமலை திருக்கோயில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திருவண்ணாமலை கிரிவலம் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு 7ம் தேதி தரிசனம் வழங்கப்பட உள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – 22 துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் வெளியீடு!

பின்னர் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருக்கோயில் 3 ம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். ஆனால் வரும் 7 ம் தேதி முதல் 17 ம் தேதி வரையும், 21 ம் தேதி முதல் 23 ம் தேதி வரையும் மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இ-பாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும் கொரோனா பாதுகாப்பின் காரணமாக தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்பதிவானது ‘www.arunachaleswarartemple.tnhrce.in’ மற்றும் ‘www.tnhrce.gov.in’ என்ற இணையதளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெறலாம்.
அப்போது ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆவண விவரம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டத்தினருக்கு 70 சதவீதமும் அனுமதி அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!