போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘பிக்பாஸ்’, ஆனந்த கண்ணீரில் மூழ்கிய வீடு – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக போட்டியாளர்களுக்கு அவரவர் வீடுகளில் இருந்து உணவு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே ஆனந்த கண்ணீருடன் நிரம்பி இருக்கும் வகையில் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
நிகழ்ச்சி துவங்கி நான்காவது வாரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5ல் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முதல் வாரத்தில் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து இருவர் வெளியேறிய நிலையில் தொடர்ந்து 2வது மற்றும் 3வது வாரத்தில் இருவர் வெளியேற்றப்பட்டனர். அதனால் போட்டிகளும், டாஸ்குகளும் வேகம் பிடிக்க பிக்பாஸ் வீடு களேபரமாக மாறி இருக்கிறது.
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து மரணம் அடையும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!!
இதற்கு இடையில் அவ்வப்போது ஏற்படும் சில சண்டைகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களுடன் இந்த சீசன் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீடுகளில் இருந்து பிடித்த உணவு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த உணவை கண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் நெகிழ்ச்சியாக்குள்ளாகி இருக்கின்றனர்.
கண்ணம்மாவின் திட்டத்தால் வெண்பாவை கைது செய்த போலீசார், அதிர்ச்சியில் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!
அந்த வகையில் உணவுப் பாத்திரத்தை பிரித்து பார்க்கும் ப்ரியங்கா அவரது அம்மாவுக்கு நன்றி சொல்கிறார். பிறகு இமான் அண்ணாச்சியின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்டிருக்கும் செய்தியை அவர் படிக்க முடியாமல் திணறுகிறார். தொடர்ந்து ராஜுவுக்கு பிடித்த உணவு அவரது வீட்டில் இருந்து வந்திருப்பதை கண்டு அவரது கண்களும் கலங்குகிறது. இந்த நிகழ்வுகள் மூலமாக பிக்பாஸ் வீடே ஆனந்த கண்ணீருக்குள் மூழ்கி இருப்பவாறு 2வது ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.