இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து மரணம் அடையும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!!
விஜய் டிவியில் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்திருக்கும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அந்த சீரியலின் கதைக்களம் மற்றும் நடிகர், நடிகைகளின் நடிப்பின் காரணமாக தனி ரசிகர் கூட்டமே இந்த சீரியலுக்கு இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தற்போது அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. ஹேமா பற்றிய உண்மைகளை தெரிந்து தெரிந்து கொண்டு இருந்தாலும் அது பற்றி ஹேமாவிடம் கூற மாட்டேன் என்று சௌந்தர்யாவிடம் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார் கண்ணம்மா.
ஒரேயொரு பாடலின் மூலம் மீண்டும் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – வைரலாகும் வீடியோ!
இதனால் தனது குழந்தை தான் என்று தெரிந்தும் கண்ணம்மாவால் அவர் மேல் பாசம் செலுத்த இயலாமல் இருக்கிறது. எப்போதும் நன்றாக பழகும் கண்ணம்மா திடீரென்று தன்னிடமிருந்து விலகி விடுவது போல் ஹேமா உணர்வதால் அவரும் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார். இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது அஞ்சலி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சமீபத்தில் தான் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போல அவருக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்றும் அதன் காரணமாக கூடிய விரைவில் குழந்தை பிறந்தவுடன் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
திருமணத்துக்கு தயாராகும் ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி? வைரலாகும் புகைப்படம்!
இப்படியாக இருக்க, அடுத்ததாக அஞ்சலிக்கு கண்ணம்மா போலவே இரட்டை குழந்தைகள் தான் பிறக்கும் என்றும் அதனால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பாராம். அதே போல் அவர் இறந்து போவதற்கும் பல வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற காட்சிகள் தான் அடுத்தடுத்த எபிசோடுகளில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.