Daily Current Affairs March 17, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!
தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 மார்ச் 2021
தேசிய நிகழ்வுகள்
கருக்கலைப்பு சட்டத்தில் சிறு திருத்தம் செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்!!
- கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் கடந்த 1971-ஆம் ஆண்டு மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் சட்டத்தை இந்தியா கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி 20 வாரங்கள் வரை இருக்கும் கருவை கலைக்கலாம் என்பதில் இருந்து 24 வாரங்களாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பெண்கள் தங்கள் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளுவது இனப்பெருக்கம் சார்ந்தது என்றும், பெண்களுக்கு சுதந்திரத்தை அளிக்கும் சட்டம் என்ற காரணத்தால் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
- நவீன மருத்துவம் முன்னேறிவிட்டதால் 24 வாரங்கள் வரையிலும் கருக்கலைப்பு செய்வதால் தாய்க்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதே இந்த சட்டம் கொண்டு வருவதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது.
மத்திய உரத்துறை அமைச்சர் இந்தியா செம் 2021 (India Chem-2021) நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்!!
- வேதியியல் மற்றும் உர அமைச்சர் சதானந்த கவுடா இந்தியா செம் 2021 நிகழ்ச்சியினை கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி துவக்கி வைத்தார். இந்தியா செம் 2021 என்ற இந்த நிகழ்ச்சி ஆசிய மற்றும் பசிபிக் மாகாணங்களில் உள்ள நாடுகளிடையே நடத்தப்படும் மிக பெரிய நிகழ்வாகும்.
- இந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு 11 ஆம் பதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை மத்திய உரங்கள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் கூட்டமைப்பு (ficci) இணைத்து ஏற்பாடு செய்துள்ளது.
- உலகளவில் வேதியல் குறித்த விவாதங்கள் இந்த நிகழ்வில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த நிகழ்வின் கருப்பொருள் “India: Global Manufacturing Hub for Chemicals and Petrochemicals” என்பதே ஆகும்.
மத்திய உரங்கள் அமைச்சகம் பற்றி
தலைமையகம் – புது டெல்லி
மத்திய அமைச்சர் – சதானந்த கவுடா
நிறுவகிக்கப்பட்டது – 1991
கைத்தறி ஏற்றுமதி கழகத்தினை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
- நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான கைத்தறி ஏற்றுமதி நிறுவனத்தினை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2015 – 2016 நிதியாண்டு முதல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது.
- இந்த நிறுவனத்திற்கு புத்துயிர் ஈட்ட வழி இல்லை என்பதனை உணர்ந்து இதனை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 59 நிரந்தர ஊழியர்களும், 6 நிர்வாக பணியாளர்களும் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு செல்வார்கள் என்று மத்திய அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் புதிய “பச்சத் பிளஸ்” காப்பீடு திட்டம் அறிமுகம்!!
- பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத இந்த காப்பீடு திட்டம், பாதுகாப்பு மற்றும் சேமிப்பை உள்ளடக்கியதாக இருக்கும் புதிய “பச்சத் பிளஸ்” காப்பீடு திட்டத்தினை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பாலிசி முதிர்வடைவதற்கு முன்பே பாலிசிதாரர் இறந்தால், அவரது குடும்பத்தாருக்கு இந்த காப்பீடு திட்டம் மூலம் நிதி ஆதாரமாக தொகை வழங்கப்படும்.
- பாலிசிதாரர் உயிருடன் இருந்தால், முதிர்வின்போது அவருக்கு கணிசமான தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த காப்பீட்டில் அடிப்படை உத்தரவாத தொகை ₹1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச வரம்பு எதுவும் இல்லை. காப்பீடு திட்டத்துடன் சேமிப்பும் இந்த திட்டம் மூலமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021
மாநில நிகழ்வுகள்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க உத்தர பிரதேச மாநிலத்தில் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது!!
- தூய்மையான கங்கைக்கான தேசிய மிஷன், உத்தரபிரதேச ஜல் நிகாம் மற்றும் ஜி.ஏஇன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட்-லஹோட்டி பில்ட்கான் லிமிடெட் ஆகியோர் இணைத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மொராதாபாத் என்ற இடத்தில் அமையப்பெற உள்ளது. மொத்தம் 99.68 கோடி ரூபாய் செலவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்த திட்டங்களுக்கான கடன் எஸ்பிஐயால் வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் பற்றி
முதல்வர் – யோகி ஆதித்யநாத்
ஆளுநர் – ஆனந்திபென் படேல்
தலைநகரம் – லக்னோ
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் மாலத்தீவு விளையாட்டு மற்றும் சமுதாய மேம்பாட்டுத்துறை இடையே கையெழுத்திட்டுள்ளது.
- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறையில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான இருதரப்பு பரிமாற்ற நிகழ்ச்சிகள், அறிவை விரிவு படுத்த உதவும் மற்றும் விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், பயிற்சி நுட்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு பற்றி
ஜனாதிபதி – இப்ராஹிம் முகமது சோலிஹ்
தலைமையகம் – மாலே
நாணயம்- மாலத்தீவு ரூஃபியா
இந்தியா மற்றும் வங்க தேசம் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன!!
- வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வங்க தேசம் தனது 50 ஆம் சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளது.
- சுதந்திர தினத்தின் பொன் விழாவினை வங்க தேசம் கொண்டாடுவதால் இந்த ஆண்டு 10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த விழா கொண்டாடப்பட உள்ளது.
- இந்த விழாவில் தொடர்ச்சியாக 10 நாட்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்க தேசம் பற்றி
தலைமையகம் – தாக்கா
பிரதமர் – ஷேக் ஹசினா
அதிபர் – அப்துல் ஹமீத்
விளையாட்டு நிகழ்வுகள்
தேசிய தடகள போட்டியில் தமிழகத்தின் தனலட்சுமி தங்கம் வென்றார்!!
- தேசிய தடகள 100 மீ., போட்டியில் தமிழகத்தின் தனலட்சுமி தங்க பதக்கத்தினை வென்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியலாவில் 24 வது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் ஹிமா தாஸ், டூட்டி சந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இந்த போட்டியில் 11.39 விநாடியில் 100 மீட்டரை கடந்து தமிழகத்தின் தனலட்சுமி சாதனை புரிந்துள்ளார்.
- அதே சமயம் இதே போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 11.76 விநாடியில் மூன்றாம் இடத்தினை பிடித்து வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர்!!
- டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரரான முரளி ஸ்ரீசங்கர் தகுதி பெற்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த 21 வயதான தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர் சீனியர் நேஷனல் அத்லெடிக் சாம்பியன்ஷிப் பெடரேஷன் கோப்பை தொடரில் பங்கேற்றார். இதில் இவர் 8.26 மீட்டர் நீளம் தாண்டி தனது முந்தைய தேசிய சாதனையான 8.20 மீட்டரை தகர்த்துள்ளார்.
- தற்போது தனது ஐந்தாவது வாய்ப்பில் 8.26 மீட்டர் தூரம் நீளம் தாண்டி டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.
- கேரளாவைச் சேர்ந்த மற்றொரு தடகள வீரர் முகமது அனீஸ் 8 மீட்டர்களும் கர்நாடகாவைச் சேர்ந்த லோகேஷ் 7.60 மீட்டர் தாண்டி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
Download TNPSC Notification 2021
பட்டியல்கள்
அதிக அளவில் பணக்காரர்களை கொண்ட மாநிலங்கள் பட்டியல் வெளியீடு!!
- இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மொத்தமாக உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை குறித்தான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. 70.3 சதவீத செல்வந்த குடும்பங்கள் இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மஹாராஷ்டிராவில் மொத்தமாக 56 ஆயிரம் செல்வந்தர்கள் இருப்பதாகவும், அடுத்த இடத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் 36 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 35 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பட்டியல் ஹாரூன் இந்தியா என்ற அமைப்பால் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.