தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி இன்று மதுரை மாவட்டத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. தற்போது 42 % வழங்கி வருகிறது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க திட்டம் – ரூ.800 கோடி ஒதுக்கீடு!
தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை உயர்த்த கோரி இன்று மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களை போல தங்களுக்கு அகவிலைப்படியை 42% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.