தமிழக அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு – வெளியான சூப்பர் நியூஸ்!!
தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ன அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது தமிழக அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், தற்போது ஊழியர்கள் 46 சதவீதத்திற்கான அகவிலைப்படி பலனை பெற்று வரும் நிலையில் ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு 4 % DA உயர்வு வழங்கப்பட்டால் கிட்டத்தட்ட 16 லட்சம் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இன்று தாக்கல் செய்யும் தமிழக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.