அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – காத்திருப்புக்கு கிடைத்த பரிசு!
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு மற்றும் அதன் நிலுவைத் தொகைகள் குறித்த அறிவிப்புகளை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர்.
நிலுவைத் தொகை:
மத்திய அரசின் ஊழியர்களுக்கு வெளியாகும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புகளுக்குப் பிறகு மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கான டி ஏ மற்றும் ஓய்வூதிய நிவாரண தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். நடப்பு தவணைக்கான டிஏ உயர்வு வரும் மார்ச் 15 ஆம் தேதிக்கு பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நான்கு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. புதிய டி ஏ ஆனது 2022 ஜூலை முதல் அமலுக்கு வருவதாகவும், இதன் மூலமாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4000 பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பணி – வந்தாச்சு அதிரடி உத்தரவு!
குறிப்பாக ஜூலை 2022 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு மொத்தம் 21 மாதத்திற்கான அலவன்ஸ் தொகை மார்ச் மாத ஊதியத்துடன் கிடைக்கும். இதேபோல் குஜராத் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கான ஜூலை 2023 க்கான அகவிலைப்படி உயர்வை நான்கு சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் 46 சதவீத டி ஏ உயர்வு பெறுவார்கள். அரசின் இந்த அறிவிப்பின் காரணமாக 4.45 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 4.63 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.