தமிழகத்தில் இனி கரண்ட் கட் பிரச்சனை இல்லை – மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்!

0
தமிழகத்தில் இனி கரண்ட் கட் பிரச்சனை இல்லை - மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் இனி கரண்ட் கட் பிரச்சனை இல்லை - மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் இனி கரண்ட் கட் பிரச்சனை இல்லை – மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் மழை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் தேவையை சமாளிப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மின்தேவை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் மழை காரணமாக வீடுகளில் முடங்கி இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இருந்தாலும் ஏசி உள்ளிட்ட குளிர்சாதன உபகாரணங்கள் தேவைப்படாது. மேலும் பண்டிகை காலம் என்பதால் பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஞாயிறு (நவ.19) அரசு ஊழியர்களுக்கு வேலை நாள் – அதிரடி உத்தரவு!

அதனால் மின் தேவை அதிகமாக தேவைப்படாது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) திறம்பட சமாளித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒட்டுமொத்த மின் தேவை சராசரியாக 14,000 மெகாவாட் ஆக இருந்த நிலையில், தற்போது 10,000 மெகாவாட் ஆக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமும், அடுத்தடுத்த விடுமுறை நாட்களும் மின் தேவையை பெரிதும் குறைத்துள்ளன. அதனால் வெயில் காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசுக்கு எந்தவித சிக்கலும் வராது என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!