ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 18 2018
டிசம்பர் 18 – சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம்
- 2018 தீம்: Migration with Dignity
டிசம்பர் 18 – சர்வதேச அரபு மொழி தினம்
- அசாம் மாநில அமைச்சரவை விவசாயிகளுக்கான கடன் தொகையை 25 சதவிகிதம் தள்ளுபடி செய்ய முடிவு.
- அசாம் அல்லாத பிற மாநிலங்களுக்கு ,தேசிய குடிமக்கள் பட்டியலை நீட்டிக்க எந்த முன்மொழிவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- பீகாரின் பாட்னாவில் கங்கா ஆற்றின் குறுக்கே ஒரு புதிய பாலம் கட்ட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
- 16 லட்சம் விவசாயிகளுக்கு 6,100 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார்.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர், ஜனாதிபதி ஆட்சி அமைக்க பரிந்துரை.
- ராஜ்குமார் சுக்லாவின் நினைவு தபால்தலையை ரயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா புதுடில்லியில் வெளியிட்டார்.
- நியூசிலாந்தில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் பயன்படுத்த தடை, இந்த விதிமுறைகளை ஜூலை 1, 2019 முதல் நடைமுறைப்படுத்துகிறது.
- ஜிசாட் 7ஏ-வை கொண்டு செல்லும் ஜிஎஸ்எல்வி எப் 11 ஏவுகணைக்கான கவுண்ட் டவுன் தொடக்கம்.
- வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம் “தேசிய அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்காணித்தல்” (MPRNL) திட்டத்தை அமல்படுத்துகிறது.
- “டைம்லெஸ் லக்ஷ்மன்” – பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த “டைம்லெஸ் லக்ஷ்மன்” என்ற நூலை பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார்.
- பெர்த் நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்தது.