நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 13, 2019
தேசிய நிகழ்வுகள்:
64-வது ரெயில்வே வார விழா
- ரயில்வே வாரியத்தின் 64 வது இரயில்வே விழா ஏப்ரல் 12, 2019 அன்று புது தில்லியில் உள்ள ரெயில் பவனில் நடைபெற்றது. ஸ்ரீ வி.கே. யாதவ் ரெயில்வே வாரியத்தின் “சிறந்த நிர்வாக கிளை” என்னும் விருதை ஸ்டேஷனரி மற்றும் ஓ & எம் கிளைகளுக்கு கூட்டாக வழங்கினார். தகுதி சான்றிதழ்கள் மற்றும் பண விருதுகள் இரயில் வாரியத்தின் திட்ட மற்றும் ERB-V கிளைகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் சூரிய சக்தியால் இயங்கும் முதல் படகு விரைவில் இயக்கப்பட உள்ளது
- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் சூரிய சக்தியால் இயக்கும் முதல் படகு விரைவில் இயக்கப்பட முயற்சி. கலக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்தின் தரவுகளின்படி, அடுத்த 10 நாட்களில் படகு இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல்.
தெலுங்கானா:
பெல்ஜியத்திற்கான கெளரவ தூதர் நியமனம்
- டாக்டர் ரெட்டிஸ் ஆய்வுக்கூடத்தின் இணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.வி. பிரசாத்தை பெல்ஜியத்திற்கான கெளரவ தூதராக ஹைதராபாத்தில் நியமனம் செய்துள்ளது.
வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:
ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக $ 20 மில்லியன் செலவு
- பேஸ்புக் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு $ 20 மில்லியனை செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது 2016 ல் செய்த பாதுகாப்பு செலவை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
வங்கிகளின் POS சாதனங்களை மேம்படுத்த திட்டம்
- 2 ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வங்கிகளின் விற்பனை நிலையத்தின் (PoS) சாதனங்களை 3G மற்றும் 4 G தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்த திட்டம்.
நியமனங்கள்:
CUB பகுதிநேர தலைவர் நியமனம்
- சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் குழு அதன் சுதந்திர இயக்குனரான ஆர்.மோகன் அவர்களே அடுத்த பகுதி நேர தலைவராக மே 4 முதல் செயல்பட வேண்டும் என RBI இடம் பரிந்துரைத்தது. தற்போது பதவியில் இருக்கும் எஸ்.மகாலிங்கம் அவர்களின் பதவி காலம் மே 3 முதல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி அறிவியல்:
நாசாவின் ‘இரட்டையர் ஆய்வு’
- பூமியில் தனது இரட்டைச் சகோதரர் இருந்தபோது விண்வெளியில் ஒரு வருடம் கழித்த யுஎஸ் விண்வெளி வீரர் மனித உடலில் விண்வெளி பயண விளைவுகள் குறித்த நுண்ணறிவுகளை நாசா ‘இரட்டையர் ஆய்வு’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது.
- அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வருடம் செலவிட்டார், அதே நேரத்தில் அவரது இரட்டை சகோதரரான மார்க் கெல்லி (முன்னாள் நாசா விண்வெளி வீரர்), பூமியில் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்:
இந்திய பிரதமருக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது
- ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவின் உயர்ந்த குடிமகன் விருதை இருதரப்பு உறவுகள் பற்றிய முயற்சிகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விருதின் பெயர் “Order of the Holy Apostle Andrew the First,” ஆகும்
பாதுகாப்பு நிகழ்வுகள்:
இந்திய கடற்படையின் “மெய்நிகர் யதார்த்த மையம்”
- கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா முதல் மெய்நிகர் யதார்த்த மையத்தை (VRC) கடற்படை வடிவமைப்பு (மேற்பரப்பு கப்பல் குழு) இயக்குநரகத்தில் தொடங்கிவைத்தார்.
- இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் “இந்தியாவில் செய்யுங்கள்” என்ற முன்முயற்சியில் இந்த மையம் இந்திய கடற்படையின் உள்நாட்டு போர் கப்பல் வடிவமைப்பு திறன்களை பெருமளவில் ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த மையத்தை நிறுவி உள்ளனர்.
ஒப்பந்தங்கள்:
இந்தியா, ASEAN இடையே கடல்சார் துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்கான உடன்பாடு
- ஏப்ரல் 11-12 அன்று நடைபெற்ற 21 ஆசியான்-இந்திய மூத்த அதிகாரிகளின் கூட்டம் (SOM) இரு தரப்பினரும் இந்தியா, ASEAN இடையே கடல்சார் துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டை ஒப்புக் கொண்டுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வுகள்:
சிங்கப்பூர் ஓபன் 2019
- சிங்கப்பூர் ஓபன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி பேட்மிட்டன் போட்டியில் உலக சாம்பியனான ஜப்பானின் நோஸ்மி ஒகுஹாரா, இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தேர்வானார். இவர் இறுதி போட்டியில் உலகின் No .1 வீராங்கனையான சீன தைபேயின் தை சூ யிங்கை எதிர்கொள்ள உள்ளார்.
PDF Download
ஏப்ரல் 13 நடப்பு நிகழ்வுகள் வீடியோ – கிளிக் செய்யவும்
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்