நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 27 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 27 2018

தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம்

மைத்ரீ திவாஸ்

  • அருணாச்சலப் பிரதேசத்தில், பல கலாச்சார சமூக நிகழ்வான மைத்ரீ திவாஸ் தவாங்கில் நவம்பர் 28 மற்றும் 29ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது உள்ளூர் சிவில் நிர்வாகம் மற்றும் தவாங் இராணுவ கேர்ரிசன் ஆகியோரால் இணைந்து ஏற்பாடு செய்யப்படும்.

அருணாச்சல் இலக்கிய விழா

  • அருணாச்சலப் பிரதேசத்தில், நவம்பர் 28 முதல் 30 வரை இட்டாநகரில் உள்ள டோர்ஜி காண்டு மாநாட்டு மையத்தில் அருணாச்சல் இலக்கிய விழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழா மாநில தகவல் மற்றும் பொது உறவுத் துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பீகார்

ராஜ்கிர் நகரில் 70 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை பீகார் முதல்வரால் திறக்கப்பட்டது

  • பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜ்கிர், நளந்தா மாவட்டத்தில் 70 அடி உயரமான புத்தர் சிலையை திறந்துவைத்தார்.
  • இது நாட்டின் இரண்டாவது உயரமான புத்தர் சிலை ஆகும். இது இளஞ்சிவப்பு மணற்கற்களால் ஆனது.

சண்டிகர்

உயர்நிலை திறன் மேம்பாட்டு மையம்

  • CSIR-IMTECH, சண்டிகரில் ஒரு ‘உயர்-நிலை திறன் மேம்பாட்டு மையம்’ அமைப்பதற்காக, இந்தியாவின் முன்னணி தேசிய ஆராய்ச்சி ஆய்வக CSIR-ன் நுண்ணுயிர் தொழில்நுட்பம் (CSIR-IMTECH) ஜெர்மனியின் மெர்க் உடன் ஒரு புதிய கூட்டணியை அறிமுகப்படுத்தியது.

நாகாலாந்து

நாகாலாந்து சுற்றுலா போலீஸ்

  • நாகாலாந்து முதலமைச்சர் நிபியூ ரியோ கோஹிமாவின் போலீஸ் தலைமையகத்தில் மாநில சுற்றுலா போலீசை அறிமுகப்படுத்தினார்.
  • வடகிழக்குப் பகுதியில் சுற்றுலா போலீசை அறிமுகம் செய்த இரண்டாவது மாநிலமாக நாகலாந்து திகழ்கிறது.
  • சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக டிசம்பர் 1 முதல் தொடங்கும் நாகலாந்தின் ஹார்ன்பில் திருவிழாவின் போது சுற்றுலாப் போலீஸ் பணியமர்த்தப்படுவர்.

புது தில்லி

லாஜிக்ஸ் இந்தியா மாநாட்டின் இலட்சினை மற்றும் தகவல் கையேடு

  • லாஜிக்ஸ் இந்தியா 2019 மாநாட்டின் இலட்சினை மற்றும் தகவல் கையேட்டை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு வெளியிட்டார்.
  • இந்த மாநாடு புது தில்லில் ஜனவரி 31, 2019 முதல் பிப்ரவரி 2, 2019 வரை நடைபெறும். இந்த மாநாட்டை இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO) ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச செய்திகள்

சமூக பாதுகாப்பு திட்டம்

நேபாள அரசு நாட்டின் உத்தியோகபூர்வ துறை ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • புதிய சமூக பாதுகாப்புத் திட்டம் பங்களிப்பு அடிப்படையிலானது, அது சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள், பாதுகாப்பான தாய்மை, விபத்து மற்றும் உடல் திறன் குறைபாடு பாதுகாப்பு, பாதுகாப்பான குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வயதான காலத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கும்.
  • இந்த முறையானது முறையான துறை ஊழியர்களுக்கு கட்டாயமாக பொருந்தும். இத்திட்டம் விரைவில் முறைசாரா துறை ஊழியர்களுக்கும் விரிவாக்கப்படும். 

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட் ஒப்பந்தத்தின் இறுதி வாக்கு

  • பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே, டிசம்பர் 11 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட் உடன்படிக்கை இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

ருமேனியா.நாவில் இந்தியாவின் முன்மொழிவுக்குவலுவான ஆதரவு

  • ருமேனியா “சர்வதேச பயங்கரவாதத்தின் மீதான விரிவான உடன்படிக்கைக்காக (CCIT) ஐ.நா.வில் இந்தியாவின் முன்மொழிவை வலுவாக ஆதரித்தது”.

வணிகம் & பொருளாதாரம்

NPCC மினிரத்னா அந்தஸ்து பெற்றது

  • தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட்(NPCC) இந்திய அரசின் மினிரத்னா: வகை-I அந்தஸ்து பெற்றுள்ளது.
  • நீர் வளங்கள் RD & GR அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ‘B’ வகை மத்திய பொது துறை நிறுவனமான NPCC, ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழையும் பெற்றுள்ளது.

தரவரிசை & குறியீடு

டி20 பந்து வீச்சாளர்களின் டாப் 5 பட்டியல்

  • ஐ.சி.சி டி20 பந்து வீச்சாளர்களின் டாப் 5 தரவரிசைப் பட்டியலில் முதல்முறையாக நுழைந்து மூன்றாம் இடம்பிடித்தார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.

மாநாடுகள்

உலகளாவிய நிலையான நகரங்கள் 2025 துவக்கம்

  • ஐ.நா. அதன் உலகளாவிய நிலையான நகரங்கள் 2025 துவக்கத்தில் பங்கு பெற உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்தியாவிலிருந்து மும்பை மற்றும் பெங்களூரு அழைப்பாளர்களாகத் தேர்வு , “பல்கலைக்கழக நகர” பிரிவில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திட்டங்கள்

நமது வாக்குநமது எதிர்காலம்

  • ஹைதராபாத்தில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிராந்திய எல்லை பணியகம் ஏற்பாடு செய்த “நமது வாக்கு – எமது எதிர்காலம்” எனும் தலைப்பில் ஐந்து நாள் கண்காட்சி தெலங்கானாவில் திறந்து வைக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏடிபி மற்றும் இந்திய அரசுக்கு இடையே ஒப்பந்தம்

  • இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) 4 கர்நாடகா நகரங்களில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கான 75 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்து.

விளையாட்டு செய்திகள்

ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி மகளிர் உலக ட்வென்டி 20 அணி XI கேப்டனாக தேர்வு

  • ஹர்மன் பிரீத் கவுர் ஐசிசி மகளிர் உலக டி 20 XI அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அதில் ஸ்மிருதி மந்தனா மற்றும் லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!