நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 06 2019
தேசிய செய்திகள்
மகாராஷ்டிரா
முதலமைச்சர் பத்னாவிஸ் மாநிலத்தின் புதிய 5 ஆண்டு தொழில்துறை கொள்கையை வெளியிட்டார்
- மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் மாநிலத்தின் புதிய 5 ஆண்டு தொழில்துறை கொள்கையை உயர்மட்ட தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் வியாபாரத்தை வலியுறுத்தி வெளியிட்டார். இந்த ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டம் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
புது தில்லி
28 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்தார் உளத்தூரை அமைச்சர்
- மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை, தில்லி போலீஸ் மற்றும் பிற மத்திய போலீஸ் அமைப்புகளின் 28 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
சர்வதேச செய்திகள்
சீனா பனிப்புகை(smog) எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது
- மாசு அளவை குறைக்கும் ஒரு முயற்சியில் மூன்றாவது தொடர்ச்சியான குளிர்காலத்திற்கு பனிப்புகை(smog) எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா நீட்டிக்க முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் பிரதான பிராந்தியங்களில் சிறிய நிலக்கரி எரிக்கும் வெப்ப கொதிகலர்களை அகற்றுவதை உறுதிப்படுத்தியது.
இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள்
- ஸ்வீடிஷ் அகாடமி இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறியது.
ஹஃபிஸ் சயீத் தலைமையிலான ஜமாத்–உத்–தாவா தடை செய்யப்பட்ட அமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது
- மும்பை பயங்கரவாத தாக்குதல் தளபதியான ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தவா மற்றும் அதன் பிரிவு ஃபாலா-இ-இன்சானிட் அமைப்பு ஆகியவை பாகிஸ்தானால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
வணிகம் & பொருளாதாரம்
கிராமப்புற வருவாய்களை மேம்படுத்துவதற்காக NRETP க்கு 250 மில்லியன் டாலர் வழங்க உலக வங்கி முடிவு
- இந்தியாவில் 13 மாநிலங்களில் உள்ள கிராமிய வருமானங்களை மேம்படுத்துவதற்காக தேசிய கிராமப்புற பொருளாதார மாற்றீட்டுத் திட்டத்திற்கான (NRETP) 250 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளது. இந்தக் கடனுதவி கிராமப்புறங்களில் பெண்களுக்கு பண்ணை மற்றும் வேளாண் பொருட்களுக்கான சாத்தியமான நிறுவனங்களை உருவாக்க கடன் உதவி செய்யும்.
மார்ச் மாதம் சர்க்கரை விற்பனை ஒதுக்கீட்டை அரசு நிர்ணயித்தது
- மார்ச் மாதம் சர்க்கரை விற்பனை ஒதுக்கீட்டை அரசு நிர்ணயித்தது. தற்போதைய மாதத்தில் சர்க்கரை ஆலைகள்5 லட்சம் டன் இனிப்பு விற்பனையை விற்க முடியும். நாட்டில் ஒவ்வொரு 524 ஆலைகளுக்கும் சர்க்கரை விற்பனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு பாக்கி தொகையை வழங்கிட வழிசெய்யவும் சர்க்கரை ஆலைகள் அதிகபட்ச வருவாய் ஈட்டவும் சமீபத்தில் கிலோ ஒன்றுக்கு 29 ரூபாயிலிருந்து அதிகரிக்கப்பட்டது.
கிராமப்புற இந்தியாவில் 96.5% வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன
- கிராமப்புற இந்தியாவில் உள்ள5 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளதாக தேசிய கிராமப்புற சுகாதார ஆராய்ச்சி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் ஓடிஎப் என அறிவிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத(ஓடிஎஃப்) அந்தஸ்தை மீண்டும் சரிபார்க்கப்பட்டடு உறுதிப்படுத்தியது.
மாநாடுகள்
இந்தியா–கென்யா கூட்டு ஆணையக் கூட்டம்
- வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் கென்யா வெளியுறவு அமைச்சர் மோனிகா கே. ஜுமா இந்தியா-கென்யா இணை ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
திட்டங்கள்
வேளாண் பொருட்களின் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான நிதியுதவி வழங்க திட்டம்
- ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள சில நாடுகளுக்கு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், வேளாண் பொருட்களின் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதல் உதவித் திட்டத்தின் கீழ், அரசாங்கம் சரக்குக் கட்டணங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை திருப்பிச் செலுத்தி விவசாய விளைபொருட்களின் விற்பனைக்கு உதவி வழங்கும்.
- இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மார்ச் 2020 வரை செய்யும் ஏற்றுமதிகளுக்கு இந்தச் சலுகை உண்டு.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தம்
- உத்தராகண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கூடுதல் நிதிக்காக 96 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. வீட்டுவசதி மற்றும் கிராமப்புற இணைப்புகளை மீட்டெடுப்பதற்கும் சமூகங்களின் பின்னடைவுகளை போக்குவதற்கும் 2014 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மாநில அரசை ஆதரித்து வருகிறது.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே ஒப்பந்தம்
- பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் 72 கல்வி நிலையங்களை புனரமைப்பதற்காக மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) ரூர்கி நியமிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக ஒரு ஒப்பந்தம் இந்தியாவின் தூதரகத்திற்கும், CBRI க்கும் இடையில் காத்மாண்டுவில் கையெழுத்தானது.
NITTTRC போபால், ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்
- இளைஞர்களுக்கான திறமை மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு போபாலில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசிய நிறுவனம் (NITTTRC) மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
விருதுகள்
‘வெப் வொண்டர் உமன்[பெண்கள்]’
- சமூக வலைதளம் மூலம் சமூக சீர்திருத்தங்களை செய்கின்ற பெண்களின் விதிவிலக்கான சாதனைகளை கொண்டாடுவதற்காக வெப் வொண்டர் உமன்[பெண்கள்] பிரச்சாரத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
- 2019 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி புது தில்லியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ.எம்.மேனகா சஞ்சய் காந்தியால் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஸ்வச்ச சர்வேக்ஷன் 2019 விருதுகள்
- இந்தோர் [தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக] – சுத்தமான நகர விருது
- புது தில்லி நகராட்சி கவுன்சில் பகுதி – தூய்மையான சிறு நகர விருது
- உத்தரகண்ட் இன் கௌச்சார் – கங்கா ஆற்றில் உள்ள சிறந்த நகரம்
- முதலிடம் பிடித்த நகரங்களுக்கு தூய்மைக்குரிய பணி செய்ததற்காக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை விருதாக வழங்கப்பட்டது.
விளையாட்டு செய்திகள்
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை
- 28 வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பைக்கு செல்லும் 18 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக மன்ரிபீத் சிங், துணை கேப்டனாக சுரேந்தர் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மலேசியாவின் இபோவில் நடக்க உள்ளது.
PDF Download
ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு